Saturday 22 July 2017

சைக்லோமென்

சைக்லோமென்
(cycl)
CYCLAMEN




இவர்கள் பலவீனத்தாலும், இரத்தசோகையினாலும் மற்றும் பார்வைக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். மாதவிலக்கு  தொல்லைகள்  மற்றும் கொழுப்பு உணவு ஒத்துக் கொள்ளுவதில்லை என்ற குறிகளினால் இவரும்  பல்சட்டில்லா  துயரரும்  போலவே ஒன்று போலவே இருப்பார்கள்.  


அடி மனதில் ஆழ்ந்த வருத்தத்தை உள்ளே அமுக்கி கொண்டிருப்பார். தமது கடமையில் தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்வு இருக்கும். இவரும்  பல்சட்டில்லா போல் இரக்கச்சுபாவம் உள்ளவராகவும் அமைதியானவராகவும் , அழுகும் தன்மை படைத்தவராகவும் இருப்பார்.


சைக்லோமென் துயரர்கள்  முழுநிறைவான அல்லது குறையற்ற , மிக உன்னிப்பான அல்லது கடமை உணர்வுடைய வாழ்க்கையைப் பெற்றுயிருப்பார்கள். ஆனால் , துரதிருஷ்டவசமாக தமது கடமையைச் செய்யும் பொழுது மிக நுண்ணியஉணர்வினால் தூண்டப்பட்டு சிறிய தவறுகள் செய்ய நேரிடும்.இத்தகைய தவறுகளே இவர்களது வாழ்க்கையை பாழ்படுத்தும். இவர்களது குடும்பம் முழுவதும் இவர்களது பொறுப்பில் இருப்பதாகவும் , அவர்களை பாதுகாக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும் நினைப்பார்கள். அவர்களுக்காவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்து இருப்பார்கள். அவருடைய குடும்பத்தில் ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ) அச்செயலுக்குத் தானே பொறுப்பு என்ற குற்றவுணர்வு மேலோங்கும்.

இவர்கள் அடர்த்தியான இருண்ட கலரில் நன்றாக ஓவியம் வரைவார்கள், அது அவர்களுடைய ஆழ்மனதில் மறைந்திருக்கும் குற்றஉணர்வின் வெளிப்பாடாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார் மரு. பரூக் மாஸ்டர்.


ஆனால் சைக்லோமென் துயரரின்  தொல்லைகள் திறந்த வெளியில் அதிகரிக்கும் மற்றும் இவருக்கு தாகமும் இருக்கும் (மரு. ரோஜர் மாரிசன் ). இந்த இரு விஷயத்தில் பல்சட்டில்லா துயரரிடமிருந்து மாறுபடுவார். ஆனால் இவர்களுக்கு தாகம் இருக்காது என்று மரு.வெர்முலான் பிரான்ஸ் அவர்களும், பகலில் தாகமின்மையும் மாலையில் தாகமும் இருக்கும் என்று மரு.கவ்தர்வைத் அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.


வெண்ணெய், கொழுப்பு , ஆட்டுக்கறி, பன்றிக்கறி இவைகளை சாப்பிட வெறுப்பு. எலுமிச்சம் பழச்சாறு பானம் குடிக்க விருப்பமிருக்கும். உணவில் அதிக உப்புச்சுவை இருப்பதாகத் தோன்றும்; உமிழ்நீரும் உப்புச்சுவையில் இருக்கும்.


ஒருபக்க தலைவலி. தலைவலியின் போது குளிர்ந்த தண்ணீரில் நெற்றியைக் கழுவினால் சுகம்.

கண் முன்னாடி கருப்பாக பறக்கற மாதிரி, மின்னுவது போல, நட்சத்திரம் மாதிரி, ஈ பறக்கற மாதிரி தெரியும். பார்வை மங்கலாக இருக்கும். இரட்டைப்பார்வை . மாறுகண்.


பெண்களுக்கு பிரசவ வேதனை போன்ற கடுமையான வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்படும். மாதவிடாய் இலகுவாக தடைபடவும் செய்யும். மாதவிடாய் ஏற்படாமலும் போய்விடலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் சில  நாட்களுக்கு முந்தியும்  , மிகவும் ஏராளமாகவும் போக்கு இருக்கும். மாதவிடாய்  கருப்பாகவும் ,  கட்டியாகவும் வெளிப்படும். மாதவிடாய் ஏற்பட்ட பிறகு நலமாக இருப்பதாக உணருவார்கள். (LACH, ZINC).


கர்ப்பமில்லாத பெண்களுக்கு மாதவிடாயிற்குப் பிறகு மார்பில் பால் சுரக்கும் அல்லது மார்பகங்களில் வீக்கம் ஏற்படும்.


ஆண்களுக்கு சுக்கிலசுரப்பி அழற்சி ஏற்பட்டிருக்கும். மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போதும் , உடகாரும் போதோ  அல்லது நடக்கும் போதோ தொல்லை கள்  அதிகரிக்கும்.



முன் கையிலிருந்து விரல்கள் வரை இழுத்துக் கொள்ளும் ( WRITER’S CRAMP) எழுத முடியாது. அதே போல் குதிங்காலில் புண்ணும் , வலியும் இருக்கும்; உட்கார்ந்தாலோ அல்லது நின்றாலோ மோசமாகும்.

No comments:

Post a Comment