Friday 28 July 2017

ரூடா

ரூடா
(RUTA)
RUTA  GRAVEOLENS




எலும்புகளிலும் , எலும்புகளின் மேலுள்ள தோல்களிலும் அடிபட்டதால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு ரூடா சிறந்த மருந்து. அதேபோல் எலும்பு முறிவுகள் , எலும்பு மூட்டுகள் நழுவுதல் (முக்கியமாக) , வாதநோய் சார்ந்த  மற்றும் இணைப்புத் திசுக்களில் ஏற்படும் தொல்லைகளுக்கும் மிக சிறந்தது. கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில்  சுளுக்கு   வீக்கம் போன்ற உணர்ச்சி போன்ற  குறிகளில் ரூடா, ரஸ்டாக்ஸ்  மருந்தை ஒத்திருக்கிறது.


இவர்கள் பதட்டம், எரிச்சல் மற்றும் வளைந்து கொடுக்காத தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள். மனம் மந்தமாக இருக்கும் அதனால்  சிந்தித்து செயலாற்றுவதற்கு விரும்பாதவர்கள். சந்தேககுணம். சண்டையிடும் குணம் . நடந்துவிட்ட செயலுக்கு அகச்சான்றின் உறுத்தல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் (REMORSEFUL). காய்ச்சலின்  போதும் அல்லது உடலின் வெப்பம் அதிகமாகும் போகும் ஏற்படும்  திகில் உணர்வினால் இறந்து விடுவோம்  என்று பயம் தோன்றும். 


தான் எப்போதும் ஏமாற்றப்படுவதாக கற்பனை செய்து கொள்வார் அதனால் தன் மேலும் மற்றவர்கள் மேலும் அதிருப்தி இருக்கும். ( மரு. வெர்முலன் பிரான்ஸ்)


உடல் முழுவதும் விறைப்பாக இருக்கும் . உடல் உழைப்பின் போது  விரைவில் களைத்து விடுவார்கள். முதுகைக் கீழே வைத்துப் படுக்கும் போது இவர்களது முதுகுவலி குறையும் . அதேசமயத்தில் கீழே படுக்கும் போது உடல் பாகத்தில் புண்போன்ற உணர்ச்சியும் இருக்கும். மனஅமைதியின்றி அல்லது நிலைகொள்ளாமல் படுக்கையில் அடிக்கடி புரண்டு படுப்பார்கள்; இடம் மாறுவார்கள். இது ரூடாவின் முக்கியக் குறிகளில் ஒன்று.

தூக்கத்தில் இருக்கும் பொழுது இலேசாக தொட்டாலும் திடுக்கிட்டு விடுவார்கள்.( மரு. வெர்முலன் பிரான்ஸ்)

தலைசுற்றல்; மாலையிலும் , நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலும் தொல்லைகள் கூடும். இவர்களுக்கு கழுத்து விரைத்துக் கொள்ளும்.


கண்களை நுண்ணிய வேலைகளில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் கண் கோளாறுகள்; உதாரணமாக கடிகாரம் பழுது பார்த்தல், அச்சுக்கோர்த்தல், கூர்ந்து வாசித்தல் , நுட்பமான தையல் வேலை, மரம் மற்றும் கல் போன்றவற்றைச் செதுக்கிச் சிற்பவேலை செய்தல் , நகைகளுக்கு கல் பதித்தல் முதலிய வேலைகளில் ஈடுபடுவோர்களுக்கு பார்வை பலவீனமடைந்து மங்களாதல். அதனால் தலைவலியும் ஏற்படும். கண்கள் சிவந்து எரிச்சலுடன் இருக்கும்.


முதுகுவலி , இடுப்புவலி மற்றும் தொடைநரம்பு வாதவலி ( SCIATICA) போன்ற வலிகள்; கீழே படுத்தால் குறையும்.


கால்களில்  ஏற்படும் வாதவலிகள் குளிர்ச்சியான , ஈரப்பதமான பருவ நிலையிலும் , உடலுழைப்பின் போதும் அல்லது சிரமம் எடுக்கும் போதும் அதிகமாகும். நாற்காலியிலிருந்து எழுந்திருக்கும் போது கால்கள் துவண்டு போகும். அதாவது தொடைகளும் , தசைகளும் அவ்வளவு பலவீனமாக இருக்கும்.

குளிந்த நீரைப் பருக கடுமையான , தனிக்கமுடியாத தாகம் இருக்கும்   (J.T. கெண்ட்)

மலசிக்கல் இருக்கும்; அடிக்கடி பயனில்லாத மலம் கழிக்கத் தூண்டுதல் ஏற்படும்.

மலப்பை நழுவுதல் ( RECTAL PROLAPSE OR PROLAPSE ANI ) என்பது இம்மருந்தின் முக்கிய குறியாகும். குறிப்பாக பிள்ளைபெற்ற பிறகும் , மலம் கழிக்க முயற்சிக்கும் போதும் மலப்பை நழுவினால் அதற்கு ரூடா தான் மருந்து என்பதில் சந்தேகத்திற்கு சிறிதும் இடமே இல்லை. 

மலம் கடினமாக இருந்தாலும்  சரி அல்லது  இளகி இருந்தாலும் சரி மலத்தைக் கழித்தவுடன் ஒவ்வொரு தடவையும் தவறாமல் மலப்பை நழுவும்.

மலக்குடல் பகுதியில் உண்டாகும் புற்று நோயிற்கு ரூடா மிகச் சிறந்த மருந்து என்கிறார் மரு. வில்லியம் போயரிக்.


காயங்களின் விளைவாக எலும்பின் மேல்தோல் தடித்து பல இடங்களில் கடினமாகி முண்டுகள் போல் வீக்கம் ( GANGLION)  இருக்கும். எலும்பின் மேல்தோல்,  மூட்டுகள் , தசைநார்கள் மற்றும் மணிக்கட்டுகள் ஆகிய இடங்களில் கழிவுப் பொருள்கள் தேங்கும்  குணமும் காணப்படும்.

எலும்புகளை மூடியுள்ள சவ்வுகள்  மற்றும் தசைநாண்கள் கிழிந்தும் , கணுக்கால் மற்றும் மணிக்கட்டுகளில் பெரிய அளவில் சுளுக்குவீக்கம் ஏற்பட்டிருக்கும் துயரர்களை ரூடா நலப்படுத்துகிறது. அதே சமயத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சுளுக்கினால் வலி உருவாகி அவதியுறும் துயரர்களுக்கு ஸ்ட்ராஞ்சியம் கார்பானிகம் (STRONT-C) பயன்படுகிறது என்றும் அடிக்கடி கணுக்காலில் சுளுக்கை ஏற்படுத்திக் கொள்ளும் தன்மையுள்ளவர்களாக  நேட்ரம் கார்பானிகம் (NAT-C) துயரர்களும் இருப்பார்கள் என்று மரு. தீதியர் கிராண்ட்ஜார்ஜ் குறிப்பிடுகிறார்.


ரூடா துயரர்களுக்கு குளிர்ச்சியான பருவகாலம் மற்றும்  குளிர்ச்சியும் ஈரக்கசிவும் உள்ள பருவ நிலைகளிலும் தொல்லைகள் அதிகமாகும். அத்துடன் நுட்பமான கண்வேலை அளவிற்கு மீறிச் செய்யும் போதும், மலம் கழிக்க மூக்கும் போதும் தொல்லைகள் உருவாகும். இவர்களது தொல்லைகள் யாவும் கீழே படுப்பதாலும், அசைவதாலும் குறையும்.


No comments:

Post a Comment